இந்திய மாணவர்கள் ஆஸ்திரேலியாவில்
தாக்கப்படுவதைத் தொடர்ந்து, நேற்று ஒரு
இந்தியப் பெண்ணும் தாக்கப்ப்பட்டிருக்கிறார்…

மேலே இருக்கும் கார்ட்டூன் நம் கார்டூனிஸ்ட் மூர்த்தியின் சொந்தக் கருத்து.
போன வாரம் ஆஸ்த்திரேலியாவிலிருந்து வந்திருந்த என் நண்பன் பெனாய் குமாரிடமும், அங்கே வேலை பார்க்கிற என் நெருங்கிய உறவினரின் மகன் ஹரியிடமும் இது குறித்துப் பேசிக்கொண்டிருந்தேன். அவர்கள் சொன்னதையெல்லாம் விலாவரியாக எழுதினால் படிக்கிற பொறுமை உங்களுக்கு இருக்காது.
ஆகவே, ஆஸ்த்திரேலியாவில் இந்தியர்கள் தாக்கப்படுவது குறித்து சுருக்கி வரைக:
ஆஸ்திரேலியாவில்தான் படித்தாக வேண்டும் என்கிற மாதிரி படிப்புகள் எதுவும் அங்கே கிடையாது. உலக அரங்கில் ஆஸ்திரேலியப் படிப்புக்கு பெரிய அங்கீகாரமும் கிடையாது. பின் ஏன் அங்கே போய் படிக்கிறார்கள்?
அங்கே படிக்கும் இந்திய மாணவர்களில் தொண்ணூறு சதவீதம் பேர் பெரும் பணக்காரர்களின் பிள்ளைகள். பணக்கார வீட்டுப் பிள்ளைகளுக்கென்று சில கல்யாண குணங்கள் உண்டு. அது மாதிரி குணங்களால் லோக்கலில் தன பெயர் கெடக் கூடாது என்பதற்காக பிள்ளைகளை வெளிநாட்டுக்கு அனுப்புகிறவர்கள்,
இரண்டாம் தாரத்துப் பிள்ளைகளால் வரும் சக்களத்தி சண்டைகளை ஒத்திப் போட அனுப்புகிறவர்கள்
‘எம்புள் ள வெளிநாட்டுல படிக்குது’ என்கிற ஜபர்த்தச்த்துக்கு அனுப்புகிறவர்கள்
என்று சொல்லிக் கொண்டே போகலாம்.
இப்படி அனுப்பப்பட்ட பிள்ளைகள் பேரில் கோடிக் கணக்கில் பணத்தை டெபாசிட் செய்து விடுகிறார்கள்.
ஒழுங்கீனங்களுக்குக் குறையே இல்லை.
பொது இடங்களில் துப்புவது, பெண்களை கேலி செய்வது, அகாலங்களில் ரோட்டில் காச் மூச் என்று கத்திக் கொண்டு சுற்றுவது, பொதுப் போக்குவரத்துகளில் தாளம் போட்டுப் பாடுவது, குடித்து விட்டு ரோட்டில் கலாட்டா செய்வது என்று ஆஸ்திரேலிய்ர்களுக்குப் பிடிக்காத எல்லாவற்றையும் செய்து வருகிறார்கள்.
கண்டித்தால் இங்கே காட்ட வேண்டிய பெரிய இடத்துப் பிள்ளை ஜபர்தஸ்த்தை அங்கே காட்டுகிறார்கள்.
இவர்களோடு சேர்ந்து சுற்றுவதாலும், இந்திய மாணவர்களின் பொதுவான இமேஜ் பாதிக்கப் பட்டிருப்பதாலும், சில சமயம் அப்பாவி மாணவர்களும் தாக்கப் படுகிறார்கள்.
மாற்றுக் கருத்து இருப்பவர்கள் வரவேற்கப் படுகிறார்கள்.
Like this:
Like ஏற்றப்படுகின்றது...