எம்.ஜி.ஆர். என்கிற மூன்றேழுத்துக்கள் மிகவும் சக்தி வாய்ந்தவை.
அதற்கு காரணங்கள் பல.
அவற்றில் ஒன்று அவர் படத்தில் வந்த கவி நயம் மிக்க பாடல்கள்.
ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம் என்பார்கள்.
இதோ அந்த ஒரு சோறு:
பொன்னெழில் பூத்தது புது வானில்
வெண்பனி போகும் நிலவே நில்
என்மனத் தோட்டத்து வண்ணப் பறவை
சென்றது எங்கே சொல்
என்று ஆரம்பித்து
முன்னம் என் உள்ளத்தில்
முக்கனி சர்க்கரை
அள்ளிக் கொடுத்த பொன் மாடமெங்கே
கிண்ணம் நிரம்பிய செங்கனிச் சாறுண்ண
முன்வந்த பொன்னந்தி மாலைஎங்கே
என்று முதற்சரணமும்
தென்னை வனத்தினில்
உன்னை முகந்தொட்டு
என்னத்தை சொன்னவன் வாடுகிறேன்
உன்னிரு கை பட்டு
புண் பட்ட நெஞ்சத்தில்
உன் பட்டுக் கை படப் பாடுகிறேன்
என்று அடுத்த சரணமும்
வருகிற பாட்டில்
என்னடா சிறப்பு என்பீர்கள்….
இந்தப் பாடல் வல்லின மெல்லின இடையினத்தின் ஆபத்தான தொகுப்பு.
ஏன் ஆபத்து என்று சொல்கிறேன் தெரியுமா?
வல்லின, மெல்லின, இடையினங்கள் ஒரு குறிப்பிட்ட விகிதாச்சாரத்தில் மாறுபட்டால் மட்டுமே உச்சரிப்புக்கு சௌகர்யமாக இருக்கும். அந்த சௌகர்யம் இந்தப் பாட்டில் இல்லை. இதைச் சரியாக உச்சரித்த டி.எம்.எஸ். க்கு ஹாட்ஸ் ஆப்.
எங்கே இந்தப் பாட்டைச் சரியான உச்சரிப்பில் பாடி பதிவு செய்து யாராவது அனுப்புங்கள் பார்ப்போம். அவர்களுக்கு செந்தமிழ் வித்தகன் என்கிற பட்டத்தை வழங்குவோம்!
சரி, இதை நான் சரியாக உச்சரித்திருக்கிறேனா என்று பார்க்க கீழே உள்ள ஒலிக் கோப்பை கேட்டுப் பாருங்கள்.
குறிப்பு: ஒரு சின்ன கூதல் செய்திருக்கிறேன். இந்த கோப்பை சேவ் செய்து விட்டு எக்ஸ் டென்ஷனை ஜெபிஈஜி க்கு பதில் எம்பீத்ரீ யாக மாற்றி விட்டு இன்வோக் செய்யுங்கள். கணினியை ஏமாற்றுகிற இந்த அல்ப்ப முயற்சி வேலை செய்கிறதா பார்ப்போம்.
ரைட் க்ளிக் செய்து செவ் டார்கெட் அஸ் போட்டு சேமியுங்கள். டோன்ட் ஷோ எக்ஸ் டென்ஷன் பார் நோன் பைல்ஸ் என்கிற ஆப்ஷனை வியூவில் அன்செலக்ட் செய்யுங்கள். எக்ஸ் டென்ஷன் தெரியும். அதை எம்பீத்ரீ யாக மாற்றுங்கள்.